Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Saturday, September 7, 2013

கலையோடு விளையாடு .Play with art

வாழ்நாள் சிறிது ,வளர்கலை பெரிது .
கலையோடு விளையாடு .
வாழ்வே ஒரு கலைதான்
செய்வது அனைத்தும் கலையாக வாழ்வும் ஒரு கலையாகும்
தொட்டது அனைத்தும் கலையாகும் மனதில் மாட்சிமை இருப்பின்
துவங்கிவிடு .முடித்துவிடுவாய்

Sunday, December 23, 2012

சேக்கனாவின் சீனா பயணம் .

வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! 'தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை  என்ற பொது வரையறையாக தரப்படுகிறது'.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை  என்ற எண்ணம்  மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில்  நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள் .அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம்
சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம்  எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.