Showing posts with label கலைமகள் ஹிதாயா ரிஸ்வி. Show all posts
Showing posts with label கலைமகள் ஹிதாயா ரிஸ்வி. Show all posts

Thursday, October 25, 2012

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கலையோடு கலந்த ராகம்

அன்பு ( பூ) மலரும் போதும்
மனதில் நட்பு மணக்கும் போதும்
தென்றலாய் கொஞ்சம் வாசம்
வீசுகிறது..!-


மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?
துயரியில் என்னை வாட்டிடவா என்னை நேசித்தாய் ?
உள்ளத்தில் உன் நினைவுகளும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்துவிட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

என்னை துக்கம் முத்தமிட
எங்கோ சென்றாய்? - கண்மணியே நீ
மனதினிலே வேதனையைத்தான்
தந்து விட்டாய்...!
என் மனதை சோதித்திடவா
நட்பை வளர்த்தாய் ? - தோழி
அன்பானவள் மேல் சந்தேகப் பட்டு
நீ தான் பிரிந்தாய் ...!
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

நீயும் நானும் நேசித்திருந்த காலம்
நேரம் அதிகம் - உன்னை
உயிரிலும் மேலென்றேன் - நீயோ
கால் தூசியாய் மிதித்து விட்டாய்!

பாசம்கொண்ட இதயத்துக்கேன்
என்மேல் சந்தேகம் ? - அடி
இரவிலும் பகலிலும் தவிக்க விட்டாய்...?
நெஞ்சத்தில் நீ வளர்த்த பாசம் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்து விட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி