'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.

