Tuesday, December 25, 2012

நெஞ்சுக்குள்ள ...

நெஞ்சுக்குள்ள ஒம்ம  முடிஞ்சிருக்கேன்
இங்கே எத்திசையில்  எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ? 
நெஞ்சுக்குள்ள இசைமான்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளப்பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆன புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் அப்பறமாக் குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே... யே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ


பச்சி ஒறங்கிருச்சு பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு... யே... யே
காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்த மக அரை நிமிசம் தூங்கலையே... யே... யே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ


ஓ... ஒரு வாய் எறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே... யே
ஏழை இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே... ஹோய்
ஓ... நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ளப்பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆன புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் அப்பறமாக் குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே... யே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்
பாடல்வரிகள்: வைரமுத்து

No comments:

Post a Comment