Thursday, October 25, 2012

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கலையோடு கலந்த ராகம்

அன்பு ( பூ) மலரும் போதும்
மனதில் நட்பு மணக்கும் போதும்
தென்றலாய் கொஞ்சம் வாசம்
வீசுகிறது..!-


மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?
துயரியில் என்னை வாட்டிடவா என்னை நேசித்தாய் ?
உள்ளத்தில் உன் நினைவுகளும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்துவிட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

என்னை துக்கம் முத்தமிட
எங்கோ சென்றாய்? - கண்மணியே நீ
மனதினிலே வேதனையைத்தான்
தந்து விட்டாய்...!
என் மனதை சோதித்திடவா
நட்பை வளர்த்தாய் ? - தோழி
அன்பானவள் மேல் சந்தேகப் பட்டு
நீ தான் பிரிந்தாய் ...!
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

நீயும் நானும் நேசித்திருந்த காலம்
நேரம் அதிகம் - உன்னை
உயிரிலும் மேலென்றேன் - நீயோ
கால் தூசியாய் மிதித்து விட்டாய்!

பாசம்கொண்ட இதயத்துக்கேன்
என்மேல் சந்தேகம் ? - அடி
இரவிலும் பகலிலும் தவிக்க விட்டாய்...?
நெஞ்சத்தில் நீ வளர்த்த பாசம் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்து விட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

2 comments:

  1. அணைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜிப்பெருநாள் நல்வாழ்த்துக்கள். அன்புடன் தண்டேல் அமீன்.

    ReplyDelete
  2. என்னை மதித்து இணைத்தமைக்கு இதயம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete